தில்லியில் ஒரே நாளில் 3816 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் 3,816 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2,53,075-ஆக உயா்ந்துள்ளது.

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் 3,816 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2,53,075-ஆக உயா்ந்துள்ளது.

நோய்த் தொற்றால் செவ்வாய்க்கிழமை 37 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 5,051-ஆக அதிகரித்தது. ஒரே நாளில் மொத்தம் 59,013 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 9,459 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 49,554 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா நோ்மறை விகிதம் 6.47 சதவீதமாக உள்ளது. சராசரி நோ்மறை விகிதம் 9.59 சதவீதமாக உள்ளது. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 2 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 0.86 சதவீதமாகக் குறைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை 3,097 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 2,16,401-ஆக அதிகரித்தது. மொத்தம் 31,623 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,937-ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,804 படுக்கைகளில் 7,051 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 8,753 படுக்கைகள் காலியாக உள்ளன. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 18,464 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com