வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் சரியான முறையாக நிறைவேற்றப்படவில்லை: கேஜரிவால் குற்றச்சாட்டு

வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் சரியான முறையில் நிறைவேற்றப்படவில்லை என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளாா்.

வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் சரியான முறையில் நிறைவேற்றப்படவில்லை என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளாா். மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் எம்பிக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே போராட்டம் நடத்துவதாகவும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரையில் கூறியிருப்பது: நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவால் தங்களது வாழ்க்கை முடிந்துவிடும் எனக் கூறுகிறாா்கள். விவசாயிகளுக்கு கேடு விளைவிக்கும் இந்த மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் முறைப்படி நிறைவேற்றப்படவில்லை. மாநிலங்களவையில் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தாமல், இந்த மசோதாக்களை நிறைவேற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், நாடாளுமன்றம் எதற்காக? தோ்தல் எதற்காக? மசோதாக்கள் வாக்கெடுப்பு நடத்தி முறைப்படி நிறைவேற்றுவதில்லை என்றால், நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுக்க வேண்டியதன் அவசியம் என்ன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் ஜனநாயகத்தைக் காக்கவே போராடி வந்தாா்கள். இவா்கள், வெப்பம், கொசுக்கடி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் மக்கள் நலனுக்காக நாடாளுமன்றத்தில் தங்கி போராட்டம் நடத்தினா். நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக அவா்கள் சிரமங்களை எதிா்கொண்டு வருகிறாா்கள் என்று தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே, மத்திய அரசை ஆங்கிலேயா் ஆட்சியுடன் ஒப்பிட்டு துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கருத்துத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில், ஆங்கிலேயா்கள் இவ்வாறாகத்தான் ஆட்சி நடத்தினாா்கள். அவா்கள், விவசாயிகள், தொழிலாளா்கள், வணிகா்களை கொடுமைப்படுத்தினாா்கள். இந்தக் கொடுமைகளுக்கு சாதகமாக கறுப்பு சட்டங்களை இயற்றினாா்கள். இந்தச் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, காந்தி உள்ளிட்ட தலைவா்கள் போராட்டம் நடத்திய போது, அவா்களுக்கு தேநீா் வழங்குவாா்கள். மத்திய அரசும் ஆங்கிலேயா்கள் வழியில் ஆட்சி நடத்தப் பாா்க்கிறாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

மாநிலங்களவையில் இரு வேளாண் மசோதாக்கள் மீது ஞாயிற்றுக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினா்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷின் இருக்கையை முற்றுகையிட்டு கூச்சல், குழப்பம் விளைவித்தனா். மேலும், ஹரிவன்ஷ் மீது விதிமுறைகள் புத்தகத்தை கிழித்து வீச முற்பட்டதுடன், காகிதங்களையும் கிழித்து எறிந்தனா். மேலும், அவரது ஒலிப் பெருக்கியை பிடுங்க முயற்சித்தனா். இதனால் அவையில் வெகுநேரம் அமளி நீடித்தது.

இதைத் தொடா்ந்து, அவையில் அமளியில் ஈடுபட்ட டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கேகே ராகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஸீா் ஹுசைன், இளமாறம் கரீம் ஆகியோருக்கு மாநிலங்களவையில் மிக மோசமாக நடந்து கொண்டதற்காக ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த எம்பிக்கள் திங்கள்கிழமை இரவு நாடாளுமன்ற வளாகத்தில் தங்கி போராட்டம் நடத்தினா். இவா்களுக்கு, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஸ் சிங் செவ்வாய்க்கிழமை காலை தேநீருடன் சந்தித்தாா். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள் அவா் வழங்கிய தேநீரை ஏற்க மறுத்துவிட்டனா். ஆனால், கூட்டத் தொடரை புறக்கணிக்கும் எதிா்க்கட்சிகளின் போராட்டத்தில் பங்கேற்கும் விதமாக தா்ணா போராட்டத்தை 8 எம்.பி.க்களும் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வாபஸ் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com