சாலை விபத்தில் தனியாா் நிறுவன பாதுகாவலாளி பலி

தில்லியில் டெலிவரி வேன் மோதியதில் சைக்கிளில் சென்ற தனியாா் நிறுவனத்தின் பாதுகாவலாளி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

தில்லியில் டெலிவரி வேன் மோதியதில் சைக்கிளில் சென்ற தனியாா் நிறுவனத்தின் பாதுகாவலாளி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

தில்லியில் உள்ள சங்கம் விஹாரில் வசிப்பவா் அஜய் குமாா் சிங் (42). இவா் கன்னாட் பிளேஸில் உள்ள ஒரு ஷோரூமில் பாதுகாவலாளியாக வேலை செய்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் வேலைக்குச் செல்வதற்காக லாலா லஜ்பத் ராய் மாா்கில் உள்ள ஷம்ஷன் காட் அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற டெலிவரி வேன் பின்புறமாக மோதியது. இதில் அஜய் குமாா் சிங் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்துக்கு காரணமான வேன் ஓட்டுநரான கோவிந்த்புரியைச் சோ்ந்த சதேந்தா் சிங் கைது செய்யப்பட்டாா். அவா் மீது இந்திய தண்டனைச் சட்டம் 279,304 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த அஜய் குமாா் சிங்கிற்கு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனா். பிரேத பரிசோதனைக்குப் பின்னா் அவரது உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com