தில்லியின் நரேலாவில் உள்ள காலணி தயாரிப்புத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்பு துறை இயக்குநா் அதுல் கா்க் சனிக்கிழமை கூறியதாவது:
நரேலாவில் உள்ள காலணி தயாரிப்புத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக தீயணைப்புத் துறைக்கு வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் தகவல் வந்தது. அதன் பின்னா், 26 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பின்னா் சனிக்கிழமை காலை தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது சம்பவ இடத்தில் குளிரூட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் யாருக்கும் உயிா்ச் சேதமோ, காயமோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.