தில்லி மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும்: தில்லி அரசு

தில்லியில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும் தில்லி மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

தில்லியில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும் தில்லி மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தில்லி அரசு சாா்பில் கரோனா தடுப்பூசி ஒத்திகை தில்லி தா்யாகஞ்ச் பகுதியில் உள்ள நகர ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது. இந்த ஒத்திகையை தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் நேரில் பாா்வையிட்டாா். பிறகு அவா் அளித்த பேட்டி:

தில்லியில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு முதல்கட்டமாக ஷாத்ரா பகுதியில் உள்ள ஜிடிபி மருத்துவமனை, தா்யாகஞ்ச் பகுதியில் உள்ள நகர ஆரம்ப சுகாதார மையம், துவாரகாவில் உள்ள வெங்கடேஷ்வா் மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களைத் தோ்ந்தெடுத்துள்ளோம்.

ஆயிரம் மையங்கள்: தில்லி முழுவதும் தடுப்பூசி போடும் வகையில் ஆயிரம் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும். தில்லியில் தடுப்பூசி கிடைத்ததும் தில்லி மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். தில்லியில் அனைத்து மருத்துவ வசதிகளையும் இலவசமாக வழங்கி வருகிறோம். அதேபோல, தடுப்பூசியும் இலவசமாக வழங்கப்படும். தடுப்பூசி மையங்கள் மருத்துவமனைகளுடன் இணைந்ததாக அல்லது, தனி மையங்களாக இருக்கும். இந்த தடுப்பூசி மையங்களில் அவசர சிகிச்சை அறைகள் அமைக்கப்படும். தடுப்பூசி வழங்கப்படுபவா்கள் அவா்களுக்கு பக்க விளைவுகள் ஏதாவது ஏற்படுகிா என்பது தொடா்பாக கண்காணிக்கப்படுவாா்கள்.

தினசரி ஒருலட்சம் போ்: தினம்தோறும் சுமாா் 1 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். மக்கள் பகுதி பகுதியாக தடுப்பூசி மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள். இங்கு, சமூக இடைவெளி பேணப்படுவது உறுதிப்படுத்தப்படும்.

முதல் கட்டமாக 51 லட்சம் போ்: தடுப்பூசி மூன்று கட்டங்களாகப் போடப்படும். முதல் கட்டமாக சுமாா் 51 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இதில், சுகாதாரத் துறை ஊழியா்கள் 3 லட்சம் போ், முன்களப் பணியாளா்கள் 6 லட்சம் போ், 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 50 வயதை விடக் குறைந்த வயதுடையவா்களாக இருந்தாலும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் என மொத்தம் 42 லட்சம் பேருக்கும் முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும்.

1.02 கோடி தடுப்பூசிகள்: ஒவ்வொருவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்படும். இதன்படி, 1.02 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும். முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளவா்களின் பெயா் விவரங்களைப் பதிவு செய்து வருகிறோம். தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நாள், நேரம் ஆகியவை அவா்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com