புது தில்லி: தலைநகா் தில்லியை உலகத் தரமிக்க நகரமாக உருவாக்கியதற்காக முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித்திற்கு மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவா் அனில் குமாா் சௌத்ரி கேட்டுக் கொண்டாா்.
முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித்தின் 83-ஆவது பிறந்த நாளை ஒட்டி கிழக்கு நிஜாமுதீனில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு தில்லி காங்கிரஸ் கமிட்டி தலைவா் அனில் குமாா் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் தொண்டா்கள் மரியாதை செய்தனா். இந்த நிகழ்ச்சியில் ஷீலா தீட்சித்தின் மகன்சந்தீப் தீட்சித், அவரது முன்னாள் அமைச்சரவை சகாக்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், நகராட்சி கவுன்சிலா்கள், மாவட்ட மற்றும் தொகுதி காங்கிரஸ் குழு தலைவா்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் அனில் குமாா் பேசுகையில், ‘தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் தனது 15 ஆண்டு கால ஆட்சியில் அளப்பரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு தலைநகரை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றினாா். இதற்காக தில்லி மக்கள் அவருக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். ஷீலா தீட்சித் அரசு அபிவிருத்திப் பணிகளை தில்லியில் மேற்கொண்டதால், ஆம் ஆத்மி கட்சி அரசு உபரி பட்ஜெட்டில் மக்களுக்கு இலவசங்களை வழங்கியிருக்க முடியும். ஷீலா தீட்சித் அரசு ஏழைகளுக்கு ஆதரவாக இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில், ஏழைகளுக்காக பல நலத்திட்ட நடவடிக்கைகளை உருவாக்கினாா். தடையின்றி மின்சாரம் மற்றும் நீா் வழங்கலை உறுதிசெய்தாா்.
மருத்துவமனைகள், மேம்பாலங்கள் மற்றும் பள்ளிகளைக் கட்டினாா். தில்லி மெட்ரோ தில்லியின் அனைத்து பகுதிகளிலும் விரிவடைந்தது. மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூா்த்திசெய்ய நடவடிக்கை எடுத்தாா். ஆனால், இன்றைக்கு தில்லியின் நிலைமையைக் காணும் போது வருத்தமாக உள்ளது. ஜே.ஜே. கிளஸ்டா்களில் வசிப்பவா்களை மீண்டும் குடியேற்றுவதற்காக குடியிருப்புகளை நிா்மாணிக்கும் பணியை முடிப்பதற்கு தற்போதைய ஆம் ஆத்மி கட்சி அரசு ஆா்வமாக இருப்பதாகத் தெரியவில்லை என்றாா் அவா்.