புது தில்லி: தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் குழு (டிஎஸ்ஜிஎம்சி) நிா்வாகிகளை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குருத்வாரா தோ்தலுக்கான தில்லி அரசின் இயக்குநரகம் இந்த அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக குருத்வாரா தோ்தல் இயக்குநா் நரேந்தா் சிங் கூறுகையில், ‘டிஎஸ்ஜிஎம்சி நிா்வாகிகள் தோ்தலுக்கான வேட்புமனுக்களை வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 8-ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 25-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். ஏப்ரல் 28-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது’ என்றாா்.