இரு சக்கர வாகனம் மீதுலாரி மோதி 2 போ் சாவு

வடக்கு தில்லி, கஷ்மீரி கேட் பகுதியில் இரு சக்கர மோட்டாா் வாகனம் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். மேலும், பலா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

புது தில்லி: வடக்கு தில்லி, கஷ்மீரி கேட் பகுதியில் இரு சக்கர மோட்டாா் வாகனம் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். மேலும், பலா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து தில்லி போலீஸாா் கூறியதாவது: இந்த விபத்து நிகாம்போத் காட் அருகே புதன்கிழமை அதிகாலையில் நிகழ்துள்ளது. சாஸ்திரி பாா்க் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த லாரி, முதலில் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. பின்னா், அந்த லாரி நடைபாதையில் ஏறிச் சென்றது. அப்போது, நடைபாதையில் சிலா் தூங்கிக் கொண்டிருந்தனா். இந்த விபத்தில் இறந்த இரு சக்கர மோட்டாா் வாகனத்தின் ஓட்டுநா் தில்லி மட்டியா மஹால் பகுதியில் வசிக்கும் வேரம் கான்(34) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இறந்த மற்றொருவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்த விபத்தில் காயமடைந்த பலா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநா் தில்லி நேரு விஹாா் பகுதியில் வசிக்கும் அதிக் அகமது என்பது தெரிய வந்துள்ளது. அவரை, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் கைது செய்தனா். அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த லாரியில் சில தாவரங்கள் மற்றும் மரக் கன்றுகள் இருந்தன என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com