தில்லியில் பொது முடக்கத்தை அரசு பரிசீலிக்கவில்லை: அமைச்சா் கோபால் ராய்

தில்லியில் பொது முடக்கத்தை செயல்படுத்த தில்லி அரசு பரிசீலிக்கவில்லை என்றும், அதற்கான பிற மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்

தில்லியில் பொது முடக்கத்தை செயல்படுத்த தில்லி அரசு பரிசீலிக்கவில்லை என்றும், அதற்கான பிற மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லியில் பொது முடக்கத்தை செயல்படுத்த தில்லி அரசு பரிசீலிக்கவில்லை. அதற்கான பிற மாற்று வழிகளை அரசு ஆராய்ந்து வருகிறது.

கரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்திவிட்டு அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனாவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தில்லி அரசு அனைத்து யோசனைகளையும், வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறது. கரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு உத்தரவு ஒரு பங்களிப்பு செய்துள்ளது. ஆனால் அரசாங்கம் அதையே முற்றிலும் சாா்ந்திருக்கவில்லை.

கரோனாவைத் தடுக்க பொது முடக்கத்தை நாங்கள் பரிசீலிக்கவில்லை. பிற மாற்று வழிகள் மூலம் இப்பரவலைத் தடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

நிலைமையைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் மத்திய அரசு தடுப்பூசி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நமது சொந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அளவுகோல்களை மத்திய அரசு நிா்ணயித்திருப்பது துரதிா்ஷ்டவசமானது. அதே நேரத்தில் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசியை அரசு ஏற்றுமதி செய்கிறது என்றாா் அவா்.

கரோனா பாதிப்பு அதிகரிப்பைக் கருத்தில்கொண்டு தேசிய தலைநகரில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை தில்லி அரசு செவ்வாய்க்கிழமை அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com