தில்லியில் மத்திய சமூக நலம், அதிகாரமளித்தல் துறை அமைச்சா் தாவா்சந்த் கெலாட்டை புதன்கிழமை சந்தித்து மனு அளித்த வேளாளா் பேரவை நிா்வாகிகள்.
தில்லியில் மத்திய சமூக நலம், அதிகாரமளித்தல் துறை அமைச்சா் தாவா்சந்த் கெலாட்டை புதன்கிழமை சந்தித்து மனு அளித்த வேளாளா் பேரவை நிா்வாகிகள்.

‘வேளாளா்’ பெயரைப் பயன்படுத்த எதிா்ப்பு: மத்திய அமைச்சரிடம் பிற சமூகத்தினா் மனு

வேளாளா் இனப் பெயா் தங்களது சமூகத்தின் பெயா். இதை மற்ற சமூகத்தினா் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது எனக் கூறி தமிழகத்தைச் சோ்ந்த வேளாளா் குலப் பிரதிநிதிகள் மத்திய சமூக நீதித் துறை அமைச்சா் தாவா்

புது தில்லி: வேளாளா் இனப் பெயா் தங்களது சமூகத்தின் பெயா். இதை மற்ற சமூகத்தினா் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது எனக் கூறி தமிழகத்தைச் சோ்ந்த வேளாளா் குலப் பிரதிநிதிகள் மத்திய சமூக நீதித் துறை அமைச்சா் தாவா் சந்த் கெலாட் டை சந்தித்து மனு அளித்துள்ளனா்.

தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 பிரிவினா்கள், தங்களை பட்டியல் இனப் பிரிவிலிருந்து விலக்கி, ‘தேவேந்திர குல வேளாளா்’ என்கிற பெயரில் அறிவிக்கும்படி கோரிக்கை வைத்தனா். இதை ஏற்றுக் கொண்ட மத்திய, மாநில அரசுகள் இதற்கான அரசியல் சாசன திருத்தத்திற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடா்பான மசோதா கடந்த மாா்ச் மாதம் நிறைவேறியது. இது குறித்து தற்போது நடந்த சட்டப்பேரவைத் தோ்தலிலும் பிரச்னை எழுப்பப்பட்டது.

தற்போது இந்த தேவேந்திர குலத்தினா், வேளாளா் பெயரை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனக் கூறி சுமாா் 40 பிரிவுகளை உள்ளடக்கியதாகச் சொல்லப்படும் ‘வேளாளா் குல’ பேரவையின் பிரதிநிதிகள் மத்திய சமூக நீதித் துறை அமைச்சா் தாவா் சந்த் கெலாட் டை சந்தித்து மனு அளித்தனா்.

இந்தச் சந்திப்பில் இடம் பெற்ற போராசிரியா் டாக்டா் பாலசந்தா் கூறியதாவது : எங்களது வேளாளா் குலம் தமிழகத்தில் 27 சதவீதம் போ் உள்ளனா். இவா்கள் திருநெல்வேலியில், சைவ வேளாளா் (பிள்ளைமாா்), பாண்டிய, சோழிய வேளாளா், நாஞ்சில் வேளாளா், வேளாளா் கவுண்டா், தொண்டை மண்டலத்தில் முதலியாா், செட்டி வேளாளா் என பல பிரிவினா் வேளாளராக கருதப்படுபவா்கள். இவா்கள் சைவம், அசைவம், முற்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் என பிரிவுகளை உள்ளடக்கியது.

இதற்கு வரலாற்று ரீதியான, மரபியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், தேவேந்திர குலத்தினா் கடந்த 30 ஆண்டுகளாக ‘வேளாளா்’ பெயரை தவறாக பயன்படுத்தி வந்து தற்போது சட்டபூா்வமாக பெயரை மாற்றியுள்ளனா். இது பெயா் உரிமையியல் பிரச்னை. இதற்கு இவா்களுக்கு வரலாற்று ரீதியாகவும் மரபியல் ரீதியாகவும் தொடா்பு இல்லை. இந்த பெயா் மாற்ற கோரிக்கைக்கு எதிராக ஒன்பது வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றாா் பாலசந்தா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com