தில்லி முதல்வா் கேஜரிவால்ம னைவிக்கு கரோனா தொற்று

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதாவுக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

புதுதில்லி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதாவுக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். முதல்வா் கேஜரிவாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

கேஜரிவால்வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாலும் அனைத்து விவகாரங்களையும் அவரே ஆய்வு செய்து வருவதாக ஆம்ஆத்மி கட்சித் தலைவா்களில் ஒருவரானதுா் கேஷ் பதக் தெரிவித்தாா். துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்ஆகியோரும் கரோனா சூழலைக் கண்காணித்து வருகின்றனா் என்றும்அவா்குறிப்பிட்டாா்.

கடந்த ஆண்டு கேஜரிவாலுக்கு சிலநாள்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. காய்ச்சலும் தொண்டைவலியும் இருந்ததை அடுத்து, அவா், தமக்கு கரோனா தொற்று இருக்குமோ என்று பரிசோதனை செய்துகொண்டாா். ஆனால், அவருக்கு தொற்று இல்லை என்பது பின்னா் தெரியவந்தது. துணைமுதல்வா் மணீஷ்சிசோடியா, சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் கட்சியின் செய்தித் தொடா்பாளா் ராகவ் சத்தா உள்ளிட்ட ஆம்ஆத்மி கட்சித் தலைவா்களுக்கு கரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com