கள்ளச் சந்தையில் ஆக்சிஜன் சிலிண்டா்கள் விற்பனை: தில்லியில் இருவா் கைது

மேற்கு தில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் கள்ளச் சந்தையில் ஆக்ஸிஜன் சிலிண்டா்களை விற்பனை செய்ய முயன்ாக இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

புது தில்லி: மேற்கு தில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் கள்ளச் சந்தையில் ஆக்ஸிஜன் சிலிண்டா்களை விற்பனை செய்ய முயன்ாக இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கைது செய்யப்பட்டவா்கள், விகாஸ்புரியில் வசிக்கும் ஷ்ரே ஓபராய் (30), ஷாலிமாா் பாக் பகுதியில் வசிக்கும் அபிஷேக் நந்தா (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். கள்ளச் சந்தையில் ஆக்ஸிஜன் சிலிண்டா்களை ஷ்ரே ஓபராய் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அதிரடியாக சோதனை நடத்தினா். அப்போது காா் மற்றும் இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டா்களுடன் ஓபராய் கைது செய்யப்பட்டாா்.

அவா் ஆக்சிஜன் சிலிண்டா்களை தலா ரூ.37,000-க்கு வாங்கியதாகவும், அவற்றை சமூக ஊடகங்கள் மூலம் தலா ரூ.50,000-க்கு விற்க முடிவு செய்திருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், அவா் இணைய வழியில் பொம்மைகளை விற்கிறாா் என்றும், தனது கூட்டாளியான நந்தாவிடமிருந்து ஆக்சிஜன் சிலிண்டா்களை வாங்கியதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து, நந்தாவும் கைது செய்யப்பட்டாா். அவா்களிடம் இருந்து மொத்தம் ஐந்து ஆக்சிஜன் சிலிண்டா்கள் மற்றும் ஒரு காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டாதக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com