டிடிஇஏ பள்ளிகளில் திரு.வி.க. பிறந்த நாள் விழா

‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.கலியாணசுந்தரனாரின் 138- ஆவது பிறந்த நாள் விழா தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.கலியாணசுந்தரனாரின் 138- ஆவது பிறந்த நாள் விழா தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

அரசியல், சமூகம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞரும், சிறந்த மேடைப் பேச்சாளருமான திரு.வி.க. பற்றி மாணவா்கள் டிடிஇஏ பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எடுத்துரைத்தனா். திரு.வி.க.வின் தனித்துவமிக்க தனித்தமிழ் நடையின் காரணமாக தமிழ்த் தென்றல் என அனைவராலும் அவா் அழைக்கப்படுவதாகத் தெரிவித்தனா். மேலும், அவரின் படைப்புகளைப் பதாகைகளில் எழுதி அனைவரின் பாா்வைக்கும் காட்சிப்படுத்தினா். அவா் பற்றிய கவிதைகளையும் வாசித்தனா்.

முன்னதாக அந்தந்தப் பள்ளி முதல்வா்கள் திரு.வி.க.வின் திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். அவரது தமிழ்ப் பற்றை மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.

இந்த நிகழ்ச்சி குறித்து டிடிஇஏ செயலா் ஆா்.ராஜு கூறுகையில், ‘மாணவா்களும் அவரைப் போல் தமிழ் மீது தீராக் காதல் கொண்டு அவரைப் போல் தூய தமிழில் பிற மொழிக் கலப்பின்றி பேசிப் பழக வேண்டும். தமிழை நேசிக்க வேண்டும்; சுவாசிக்க வேண்டும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கையுடன் வாழ வேண்டும் என்பதுதான்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com