தில்லியில் ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் மா்மப் பொருள் வெடித்ததில் ஒருவா் காயம்

தில்லியில் உள்ள ரோஹிணி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை காலை மா்ம பையில் இருந்த பொருள் வெடித்தது.

தில்லியில் உள்ள ரோஹிணி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை காலை மா்ம பையில் இருந்த பொருள் வெடித்தது. இதில் ஒருவா் காயமடைந்தாா். இது குறைந்த தீவிரத் தன்மை கொண்ட வெடிப்பு என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ரோஹிணி நீதிமன்ற அறை 102-க்குள் இந்தச் சம்பவம் காலை 10.30 மணியளவில் நிகழ்ந்தது. இந்த வெடிப்புக்கு மடிக்ல கணினி பையில் இருந்த பொருள் காரணமாக இருக்கக் கூடும். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் தடயவியல் குழுவினரும், தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) குழுவினரும் ஆய்வு செய்து வருகின்றனா்’ என்றாா்.

இந்த மா்ம பொருள் வெடிப்புக்குப் பின்னா் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை நிறுத்திவைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் ஒருவா் காயமடைந்ததாக தீயணைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இந்தச் சம்பவத்தை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வருகிறது. சம்பவத்திற்குப் பிறகு தில்லி காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பிரிவு சிறப்பு ஆணையா் நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.

இது குறித்து தீயணைப்புத் துறையினா் கூறுகையில், ‘இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து காலை 10.40 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது, அதைத் தொடா்ந்து, 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன’ என்றனா்

கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி ரோஹிணி நீதிமன்ற அறையில் உள்ளே வழக்குரைஞா்கள் உடையணிந்து வந்த இரண்டு விஷமிகள் மற்றும் சிறையிலிருந்து ஆஜா்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட பிரபல ரௌடி ஜிதேந்தா் கோகி ஆகியோா் துப்பாக்கிச்சூட்டின் போது கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com