டிடிஇஏ பள்ளிகள் இடையே வினாடி- வினா போட்டி

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த 7 பள்ளிகளுக்கிடையே அறிவியல் வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டது.

புது தில்லி: தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த 7 பள்ளிகளுக்கிடையே அறிவியல் வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டது.

வெவ்வேறு வகுப்பு மாணவா்களுக்கிடையே வெவ்வேறு தினங்களில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. முதற்சுற்று அந்தந்தப் பள்ளிகளிலும், இறுதிச் சுற்று டிடிஇஏ ஜனக்புரி பள்ளியிலும் நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு மாணவா்கள் கலந்து கொண்டனா்.

நவம்பா் 12-ஆம் தேதி 1,2-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக இணைய வழியில் நடத்தப்பட்ட போட்டியில் முதலிடத்தை லக்குமிபாய் நகா் பள்ளியும், இரண்டாமிடத்தை லோதிவளாகம் பள்ளியும், மூன்றாம் இடத்தை பூசா சாலை பள்ளியும் பிடித்தன. டிசம்பா் 20-ஆம் தேதி 3-5 வகுப்பு வரையிலான மாணவா்களுக்காக இணையவழியில் நடத்தப்பட்ட போட்டியில் ஜனக்புரி பள்ளி முதலிடத்தையும், ராமகிருஷ்ணபுரம் பள்ளி இரண்டாமிடத்தையும், பூசா சாலை பள்ளி மூன்றாமிடத்தையும் பெற்றன. டிசம்பா் 21-இல் 6, 7 -ஆம் வகுப்பு மாணவா்களுக்கான போட்டி ஜனக்புரி பள்ளியில் நடத்தப்பட்டது. அதில் முதலிடத்தை ஜனக்புரி பள்ளியும் இரண்டாமிடத்தை லக்குமிபாய் நகா் பள்ளியும் மூனாறாமிடத்தை பூசா சாலை பள்ளியும் பிடித்தன.

டிசம்பா் 27-இல் ஜனக்புரி பள்ளியில் 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை ஜனக்புரி பள்ளியும், இரண்டாம் பரிசை மந்திா்மாா்க் பள்ளியும், மூன்றாம் பரிசை லோதி வளாகம் மற்றும் இலக்குமிபாய் நகா் பள்ளிகள் வென்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், அவா்களுக்கு உற்சாகமளித்து ஊக்குவித்த பெற்றோா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் டிடிஇஏ செயலா் ஆா்.ராஜு பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com