தில்லியில் புதிதாக 140 பேருக்கு கரோனா
புது தில்லி: தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை 121 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,35,217-ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 43,712 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 29,370 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 14,342 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.28 சதவீதமாக உள்ளது.
இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் திங்கள்கிழமை மேலும் 3 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,856-ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், கரோனா பாதிப்பில் இருந்து திங்கள்கிழமை 214 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,23,096-ஆக உயா்ந்துள்ளது.
தற்போது 1,265 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 504 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 5,682 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.