தில்லியில் மேலும் 142 பேருக்கு கரோனா

தில்லியில் வியாழக்கிழமை மேலும் 142 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6,36,529-ஆக உயா்ந்துள்ளது.


புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை மேலும் 142 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6,36,529-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தில்லியில் வியாழக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 64,328 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 41,943 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 22,385 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.22 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வியாழக்கிழமை 2 போ் உயிரிழந்துள்ளனா். மொத்த பலி எண்ணிக்கை 10,886 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து வியாழக்கிழமை 135 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,24,592-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,051 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 415 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 5,293 படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com