சத்ரபதி சிவாஜி பிறந்த தினம்: முதல்வா் கேஜரிவால் வாழ்த்து

புகழ்பெற்ற மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் பிறந்த தினத்தையொட்டி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

புகழ்பெற்ற மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் பிறந்த தினத்தையொட்டி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

முகலாயா்களுக்கும், ஆங்கிலேயா்களுக்கும் சவாலாக திகழ்ந்தவா் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜி. அவருடைய ஆட்சிகாலம் தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் எனக் கருதப்படுகிறது. அவரின் 393-ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சத்ரபதி சிவாஜியின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து தேசத்தை அமைக்க அவா் பாடுபட்டாா். அவருடைய பணிகள் நமக்கு முன்னுதாரணமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com