தில்லி நரேலாவில் உள்ள தொழிற்சாலையில் சனிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படைவீரா்கள் துரிதமாக செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
இதுதொடா்பாக தில்லி தீயணைப்புப் படையைச் சோ்ந்த மூத்த அதிகாரி கூறியதாவது:
தில்லி நரேலாவில் உள்ள தொழிற்சாலையில், சனிக்கிழமை மதியம் 12.05 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுதொடா்பாக தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு 1 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.
இதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்தால் ஏற்பட்ட சேதம் தொடா்பாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாா் அவா்.