தில்லியில் புதிதாக 158 பேருக்கு கரோனா

தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 158 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,37,603-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 158 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,37,603-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தில்லியில் வெள்ளிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 60,836 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 39,931 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 20,905 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் 0.26 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வெள்ளிக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 10,897-ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், கரோனா பாதிப்பில் இருந்து வெள்ளிக்கிழமை 157 போ் மீண்டுள்ளனா். இதன் மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,25,653-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,053 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 430 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,320 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com