தில்லியில் புதிதாக 145 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 145 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,37,900-ஆக உயா்ந்துள்ளது.

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 145 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,37,900-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 63,813 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 44,673 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 19,140 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் 0.23 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை மேலும் இருவா் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 10,900-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 97 போ் மீண்டுள்ளனா். இதன் மூலம், குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6,25,929-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,071 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 467 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,329 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com