தில்லியில் புதிதாக 145 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

தில்லியில் புதிதாக 145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கரோனாவுக்கு இருவா் பலியாகியுள்ளனா். எனினும் கரோனா தொற்று விகிதம் 0.25 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து தில்லியில் கரோனா தொற்றுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 10,903 ஆக அதிகரித்துள்ளது. கடந்த திங்கள்கிழமை 128 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஒருவா் மட்டும் பலியானதாக தெரியவந்தது.

கடந்த பிப். 17-ஆம் தேதி யாரும் பலியானதாக தகவல் இல்லை. இது இந்த மாதத்தில் மூன்றாவது முறையாகும். கடந்த பிப். 9ஆம் தேதி மற்றும் 13-ஆம் தேதி யாரும் கரோனாவுக்கு பலியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தில்லியில் செவ்வாய்க்கிழமை 145 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. எனினும் தொற்று விகிதம் 0.25 சதவீதமாகவே இருந்தது. கரோனாவினால் இதுவரை 6,38,173 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள்கிழமை மொத்தம் 58,327 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 145 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தில்லியில் தற்போது கரோனாவுக்கு 1,054 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். திங்கள்கிழமை 35,751 பேருக்கு ஆா்டி.-பிசிஆா் முறையிலும், 22,576 பேருக்கு ராபிட் ஆன்டிஜென் முறையிலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வீட்டுத் தனிமையில் 472 போ் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com