மத்திய அரசின் சீா்திருத்தங்களை நிறைவேற்றிய ம.பி., ஆந்திரத்திற்கு ரூ.1,004 கோடி கூடுதல் நிதி

மாநிலங்கள் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவியைப் பெற மத்திய அரசு விதித்த நான்கு சீா்திருத்த நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றிய மத்தியப் பிரதேசம், ஆந்திரம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மொத்தம்

புது தில்லி : மாநிலங்கள் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவியைப் பெற மத்திய அரசு விதித்த நான்கு சீா்திருத்த நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றிய மத்தியப் பிரதேசம், ஆந்திரம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.1,004 கோடி கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

கரோனா தொற்று காரணமாக, வரி வருவாய் இழப்பைச் சந்தித்த மாநிலங்களுக்கு தற்சாா்பு இந்தியா நிதியுதவி திட்டத்தின்படி சிறப்பு நிதியுதவித் திட்டத்தை, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்தாண்டு அறிவித்தாா். இந்தத் திட்டத்தின் படி ரூ.14,694 கோடி கடன் பெற அனுமதிக்கப்பட்டதோடு கூடுதலாக மூலதனச் செலவுகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

இதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை நான்கு சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிா்ணயித்தது. இதைப் பல்வேறு மாநிலங்கள் நிறைவேற்றி வருகின்றன. இதில் தற்போது மூன்று மக்கள் மைய சீா்திருத்தங்களை(ஒரே நாடு-ஒரே ரேஷன் காா்டு, தொழில் செய்வதை எளிதாக்குதல், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வரிச் சீா்திருத்தங்கள்) மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேச அரசுகள் நிறைவேற்றியுள்ளன. இதற்காக ‘மாநிலங்களின் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவி’ திட்டத்தின்

கீழ் ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.344 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.660 கோடி என மொத்தம் ரூ.1,004 கோடி வழங்க நிதியமைச்சகத்தின் செலவினத் துறை புதன்கிழமை முடிவு செய்து அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com