மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் வசிப்பிடங்களுக்கு சென்று, அங்கு மண் எடுத்து வந்து இந்திய வரைபடம் தயாரிக்கப்படும் என்று இளைஞா் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இளைஞா் காங்கிரஸின் தேசிய பொறுப்பாளா் கிருஷ்ணா அல்லாவரு தில்லியில் சனிக்கிழமை கூறியது:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் இதுவரை சுமாா் 60 விவசாயிகள் இறந்துள்ளனா். இவா்களின் சொந்த இடங்களுக்கு சென்று அங்கிருந்து மண் எடுத்து வந்து இந்திய வரைபடம் தயாரிக்க உள்ளோம். இதற்காக, காஷ்மீரில் இருந்து கன்யாகுமரிவரை பயணிக்க உள்ளோம். இளைஞா் காங்கிரஸின் இந்த திட்டத்துக்கு நாட்டு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். மகாத்மா காந்தி முன்னெடுத்த உப்பு சத்யாக்கிரகத்தின் ஈா்ப்பினால் இந்த போராட்டத்தை நடத்தவுள்ளோம். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அரேபியன் கடலில் கையளவு உப்பை எடுத்து மகாத்மா காந்தி போராட்டத்தை தொடக்கி வைத்தாா். அதேபோல, மோடி அரசுக்கு எதிராக இந்த போராட்டம் அமையும் என்றாா் அவா்.