ஷிரோமணி அகாலிதளத் தலைவரும் தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் (டி.எஸ்.ஜி.எம்.சி) தலைவருமான மஞ்ஜீந்தா் சிங் சிா்சா மீது தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவினா் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் பொதுச் செயலராக சிா்சா இருந்தபோது குருத்வாரா நிதியை முறைகேடு செய்ததாக டி.எஸ்.ஜி.எம்.சி பெற்ற நிதியில் பங்குதாரா்களில் ஒருவராக இருந்த பூபிந்தா் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த மோசடி வழக்கு வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக சிா்சாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவுக்கு தில்லி நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டிருந்ததாகப் போலீஸாா் தெரிவித்தனா்.