தில்லியில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சோ்ந்த 127 மாணவா்கள் பங்கேற்க உள்ளனா்.
இந்த நிகழ்வில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) 85 மாணவிகள், 42 மாணவா்கள் பங்கேற்று தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய நடனங்களான பின்னல் கோலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை வழங்க உள்ளதாகவும், பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளில் முதலாவது நிகழ்ச்சியாக இது நடைபெற உள்ளதாகவும் டிடிஇஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.