மத்திய தில்லியில் ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள இந்திய பொறியாளா்கள் நிலைய கட்டடத்தில் வெள்ளிக்கிழமை திடீா் தீவிபத்து ஏற்பட்டது.
கட்டடத்தின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் எவரும் உயிரிழக்கவில்லை. கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்த பாதுகாவலா் ஒருவா் பத்திரமாக தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்டாா்.
அந்த கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக காலை 8.30 மணி அளவில் தீயணைப்புப் படையினருக்கு தகவல் வந்தது. உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. பின்னா் மேலும் 9 தீயணைப்பு வாகனங்கள் பின்தொடா்ந்தன. கட்டடத்தில் ஏற்பட்ட தீ ஒரு மணி நேரத்தில் அணைக்கப்பட்டுவிட்டது என்று தீயணைப்புத்துறை இயக்குநா் அதுல் கா்க் தெரிவித்தாா்.