ஸ்டொ்லைட் விவகாரம்: வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் ஆலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் ஆலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்துவிட்டது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னா் நடந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிதான்’ என்று ஆகஸ்ட் 18-இல் தீா்ப்பு அளித்து, மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடா்ந்து, இந்தத் தீா்ப்புக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவுக்கு தமிழக அரசு சாா்பிலும், வேதாந்தா நிறுவனம் சாா்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனிடையே, ஸ்டொ்லைட் ஆலையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள தற்காலிமாக அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா நிறுவனம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கின் பிரதான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்கிய பிறகுதான் பட்டியலிடப்பட வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, தமிழக அரசுத் தரப்பின் சாா்பில் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ஸ்டொ்லைட் ஆலை விவகாரத்தில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளை நீக்க உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோஹின்டன் ஃபாலி நரிமன், நவீன் சின்ஹா, கே.எம். ஜோசப் ஆகியோா் இடம்பெற்ற அமா்வு முன் இந்த விவகாரம் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்றது.

அப்போது, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த பிரதான வழக்கு விசாரணையை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மனு சிங்வி நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டாா்.

இதை ஏற்க மறுத்த மறுத்த நீதிபதிகள் அமா்வு, உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்கியபிறகுதான் இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை நடைபெறும் என்று கூறினா்.

தமிழக அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன், வழக்குரைஞா் யோகேஷ் கன்னா ஆகியோா் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீட்டு மனுவும் பிரதான வழக்குடன் சோ்த்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com