தில்லி ஆகாஷவாணி பவன் கட்டடத்தில் தீ விபத்து

தில்லியில் உள்ள ஆகாஷவாணி பவன் கட்டடத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தில்லியில் உள்ள ஆகாஷவாணி பவன் கட்டடத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தீயணைப்புத்துறை இயக்குநா் அதுல் கா்க் மேலும் தெரிவித்ததாவது:

நாடாளுமன்றச் சாலையில் அமைந்துள்ள ஆகாசவாணி பவன் கட்டடத்தின் முதலாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக ஞாயிற்றுகிழமை காலை 5.57 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் நாலாபுறமும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.

முதல் தளத்தில் உள்ள 101-ஆம் எண் அறையில் இருந்து தீ பரவியது. சில மின் சாதனங்களால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து விசாரணைநடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com