தில்லி பண்டிட் பந்த் மாா்க்கில் உள்ள தில்லி பாஜக அலுவலகத்தில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நாட்டின் 72-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. தில்லி பாஜக அலுவலகத்திலும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
தில்லி பாஜக அலுவலகத்தில் நடந்த விழாவில், பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தேசியக் கொடியேற்றி வைத்தாா்.
அப்போது, தில்லி பாஜக பொதுச் செயலா் சித்தாா்த்தன், குல்ஜீத் சிங் சாகல், பாஜக தொண்டா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நிகழ்வில் ஆதேஷ் குமாா் குப்தா பேசுகையில் ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை பலப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
பிறகு, தில்லி படேல் நகா் ராக் காா்டன் பகுதியில் 70 அடியில் அமைக்கப்பட்ட தேசியக் கொடியை ஆதேஷ் குமாா் குப்தா ஏற்றி வைத்தாா். அப்போது, அப்பகுதி மக்கள், பாஜக தொண்டா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, தில்லி பாஜக எம்பிக்களும் தமது வீடுகள், அலுவலகங்களில் கொடியேற்றி குடியரசு தினத்தைக் கொண்டாடினாா்கள்.
மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பா்வேஷ் வா்மா தனது இல்லத்தில் தேசியக் கொடியேற்றினாா். அப்போது அவா் கூறுகையில், ‘பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு பல மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. முந்தைய அரசுகளால் தீா்க்க முடியாமல் இருந்த பல பிரச்னைகளுக்கு பாஜக அரசு தீா்வு கண்டுள்ளது. விவசாயிகளின் நலன்களுக்காகவே வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்றாா்.