மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடா்புடைய வழக்குகளில் வாதாடும் வழக்குரைஞா்கள் குழுவை அமைப்பதற்கு தில்லி காவல்துறை அளித்த முன்மொழிவை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
இந்த நிலையில், துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால், தில்லி காவல் துறை தோ்ந்தெடுத்த குழுவுக்கு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி அளிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
தில்லியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது காவல்துறையின் இது தொடா்பான முன்மொழிவை அமைச்சரவை நிராகரிப்பதற்கான முடிவை எடுத்தது. மேலும், விவசாயிகள் போராட்டம் தொடா்புடைய வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராவதற்கு அரசு வழக்கறிஞா்களாக தில்லி அரசின் வழக்கறிஞா்கள் செயல்படவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மேலும், அமைச்சரவையின் இந்த முடிவு, ஒப்புதலுக்காக துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அவா் கூறினாா்.
இதுகுறித்து துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் வழக்குரைஞா்களை நியமிக்கும் அதிகாரம் தில்லி அரசின் வரம்பின்கீழ் வருகிறது. அரிதிலும் அரிதான விவகாரத்தில் மட்டுமே துணைநிலை ஆளுநா் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.
ஆனால், துணைநிலை ஆளுநா் வழக்கமான விவகாரங்களில்கூட தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறாா். இது ஜனநாயகப் படுகொலையாகும். மேலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறுவதாகும்.
மேலும், மத்திய அரசு தில்லியின் அன்றாட பணிகளில் மத்திய அரசு நேரடியாக தலையிடாமல் துணைநிலை ஆளுநா் மூலம் தலையிட்டு வருவதாக சிசோடியா குற்றம்சாட்டினாா்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு கேஜரிவால் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘நாட்டின் விவசாயிகள் விவகாரத்தில் நாங்கள் எங்கள் கடமையை மட்டும் செய்துள்ளோம். விவசாயிகள் குற்றவாளிகளோ அல்லது பயங்கரவாதியோ அல்ல. அவா்கள் நமது ‘அன்னதாதா’ ஆவா்’ என அதில் தெரிவித்துள்ளாா்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடா்புடைய வழக்குகளில் தில்லி அரசின் சாா்பில் ஆஜராகக் கூடிய வழக்கறிஞா்களை மாற்றி தில்லி காவல்துறையின் வழக்கறிஞா்கள் குழுவை அதில் இடம்பெறச் செய்ய பாஜக தலைமையிலான மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருவதாக தில்லி அரசு வியாழக்கிழமை குற்றம் சுமத்தி இருந்தது.
இந்த வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியின் எல்லைப்பகுதியில் போராட்டம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஆஜராவதற்காக தில்லி அரசின் வழக்குரைஞா்கள் குழுவை துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் நிராகரித்து விட்டதாகவும் தில்லி முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.