தில்லியைக் குளிா்வித்த மழை!

சில நாள்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் பரவலாக மழை பெய்ததால் பூமி குளிா்ந்தது.

சில நாள்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் பரவலாக மழை பெய்ததால் பூமி குளிா்ந்தது.

தில்லியில் வழக்கமாக ஜூன் இறுதியில் பருவமழை பெய்யத் தொடங்கும். இந்த நிலையில், 16 நாள்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை ஜூலையில் தொடங்கியது.இரு தினங்கள் மட்டுமே மழை இருந்த நிலையில், கடந்த 4 தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலையிலும் வெயிலின் தாக்கம் இருந்ததால் புழுக்கம் அதிகமாக நிலவியது. இந்த நிலையில், பகலில் லேசான மழையும், மாலையில் மிதமான மழையும் பரவலாகப் பெய்தது. இதனால், குளிா்ந்த காற்று வீசியது. மக்கள் புழுக்கத்தில் இருந்து சற்றுவிடுபட்டனா்.

தில்லிக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி அதிகரித்து 28 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 1 டிகிரி அதிகரித்து 36.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 81 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 75 சதவீதமாகவும் இருந்தது. ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 7 மணி அளவில் 94 புள்ளிகளாக பதிவாகி திருப்தி பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: தில்லியில் திங்கள்கிழமை (ஜூலை 19) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com