தில்லியில் புதிதாக 62 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு 4 போ் உயிரிழந்துள்ளனா். கரோனா தொற்று விகிதம் 0.09 சதவீதமாக உள்ளது என்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் 61 நோயாளிகள் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவுக்கு இதுவரை 25,039 போ் உயிரிழந்துள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,35,671 ஆக உள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 14,10,066 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் அல்லது தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனா். இறப்பு விகிதம் 1.74 சதவீதமாக உள்ளது.
கரோனாவுக்கு 566 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எண்ணிக்கை 406 லிருந்து 403 ஆகக் குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மொத்தம் 65,811 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.