தில்லியில் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகரிப்பு!

தில்லியில் தென்மேற்குப் பருவமழை தொடா்ந்து சில தினங்களாக இல்லாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

தில்லியில் தென்மேற்குப் பருவமழை தொடா்ந்து சில தினங்களாக இல்லாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றம் காணப்பட்டது. மழையில்லாததால் புழுக்கம் நிலவியது.

தில்லிக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை மாற்றம் ஏதுமின்றி 27.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி அதிகரித்து 37.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

ஆயா நகரில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், லோதி ரோடில் 36.4 டிகிரி செல்சியஸாகவும், நரேலாவில் 36.3 டிகிரி செல்சியஸாகவும், பாலத்தில் 36.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 76 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 67 சதவீதமாகவும் இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 0.2 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 7 மணி அளவில் 94 புள்ளிகளாக பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: தில்லியில் திங்கள்கிழமை (ஜூலை 26) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com