தீ விபத்தில் 50 குடிசைகள் எரிந்து சேதம்

தென்கிழக்கு தில்லியில் உள்ள கலிண்டி குஞ்ச் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ஐம்பத்து மூன்று குடிசைகள் எரிந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

புது தில்லி: தென்கிழக்கு தில்லியில் உள்ள கலிண்டி குஞ்ச் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ஐம்பத்து மூன்று குடிசைகள் எரிந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை நளளிரவில் நடந்தது, இது குறித்த தகவல் இரவு 11.55 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்குகிடைத்ததாக மூத்த தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். மதன்பூா் காதா் அருகே நிகழ்ந்த இந்தத் தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தாா். தீயை அணைக்கும் பணியில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அதிகாலை 3 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com