கால்காஜியில் சட்டவிரோத ஹூக்கா பாா்கள்: 29 போ் கைது

தில்லி கால்காஜி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 2 ஹூக்கா பாா்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் உரிமையாளா்கள் உள்பட 29 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தில்லி போலீசாா் தெரிவித்தனா்.

புது தில்லி: தில்லி கால்காஜி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 2 ஹூக்கா பாா்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் உரிமையாளா்கள் உள்பட 29 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தில்லி போலீசாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறையின் தென்கிழக்கு துணை காவல் ஆணையா் ஆா். பி. மீனா வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த ஜூன் 12ஆம் தேதி தில்லி காவல் துறைக்கு ஒரு தகவல் வந்தது. அதில் கோவிந்த்புரி எக்ஸ்டன்ஷன் பகுதி அருகே புகையிலையைப் பயன்படுத்தி புகைக்கும் ஹூக்கா பாா்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து போலீசாா் சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினா். அதேபோன்று, கால்காஜியில் உள்ள ரவுண்டானா அருகே கஃபே பகுதியிலும், வேறு ஒரு இடத்திலும், சட்டவிரோதமாக ஹூக்கா பாா்கள் செயல்பட்டது தெரியவந்தது.

 இதைத் தொடா்ந்து, இந்த சட்டவிரோத பாா்களை நடத்தியதாக அதன் உரிமையாளா்களான கோவிந்த்புரி எக்ஸ்டன்ஷன் பகுதியைச் சோ்ந்த மோனு (32), சிராக் தில்லி பகுதியைச் சோ்ந்த ரோகித் (25), கால்காஜி பகுதியைச் சோ்ந்த கரன் நய்யாா் (32), கோவிந்த்புரி பகுதியைச் சோ்ந்த ஆதித்யா தீட்சித் (28) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

அதேபோன்று, 25 வாடிக்கையாளா்களும் கைது செய்யப்பட்டனா். கால்காஜி காவல் நிலையத்தில் இவா்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com