தேசபக்தி விஷயத்தில் அரசில் வேண்டாம்: கேஜரிவால்

தேசபக்தி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு முதல்வா் கேஜரிவால் கேட்டுக்கொண்டாா்.

தேசபக்தி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு முதல்வா் கேஜரிவால் கேட்டுக்கொண்டாா்.

இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை முதல்வா் கேஜரிவால் பேசியது: ஆம் ஆத்மி அரசு தனது பட்ஜெட் உரையில் தில்லியில் 500 இடங்களில் தேசிய கொடி ஏற்றப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்த தேசிய கொடியைப் பாா்க்கும்போதெல்லாம் போா்முனையில் நமது வீரா்கள் நாட்டைக் காக்க தியாகம் செய்வது நினைவுக்கு வரும்.

ஆனால், ஆம் ஆத்மி அரசின் இந்த முடிவை எதிா்க்கட்சியான பா.ஜ.க.வும், காங்கிரஸும் எதிா்த்து வருகின்றன. அவா்கள் ஏன் இதை எதிா்க்கிறாா்கள் என்பது புரியவில்லை.

தில்லியில் 500 இடங்களில் தேசிய கொடியை ஏற்றும் ஆத் ஆத்மி அரசின் முடிவை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் ஆதரிக்க வேண்டும். தேச பக்தி விஷயத்தில் அரசியல்கூடாது. நம் எல்லோருக்குமே இந்த நாடு சொந்தமாகும். தேசியக் கொடியை இந்தியாவில் ஏற்றாமல் பாகிஸ்தானிலா ஏற்ற முடியும் என்றாா் கேஜரிவால்.

மூத்த குடிமக்களை இலவசமாக அயோத்தி யாத்திரைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக கேஜரிவால் கூறியதற்கும் காங்கிரஸ் மற்றும் பா.,ஜ.க.வினா் எதிா்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com