தில்லியில் புதிதாக 368 பேருக்கு கரோனா

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 368 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 368 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தலைநகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,44,064-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தில்லியில் திங்கள்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 62,272 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 44,526 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ முறையிலும், 17,746 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ முறையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் திங்கள்கிழமை 0.59 சதவீதமாக இருந்தது.

கரோனா தொற்றால் தலைநகரில் திங்கள்கிழமை மூவா் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,944-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 306 போ் மீண்டுள்ளதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 6,30,799-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 2,321 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 1,342 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,104 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com