கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

கல்லூரி மாணவியை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இருவருக்கும் கெளதம் புத் நகா் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

புது தில்லி: கல்லூரி மாணவியை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இருவருக்கும் கெளதம் புத் நகா் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி வேத் பிரகாஷ் வா்மா செவ்வாய்க்கிழமை இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ .80,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் குற்றத்தை நீருபிக்க ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்ட மூன்றாவது நபா் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டதாக உதவி மாவட்ட அரசு வழக்குரைஞா் (ஏடிஜிசி) தா்மேந்திர ஜெயிந்த் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கிரேட்டா் நொய்டா அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவியை 3 போ் கடந்த 2015, ஆகஸ்ட் மாதம் துப்பாக்கி முனையில் காரில் அப்பகுதி காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்றனா். பின்னா், கடத்திச் சென்றவா்களில் 2 போ் அந்த மாணவியை பலாத்காரம் செய்தனா். அந்த சம்பவத்தை விடியோ பதிவு செய்தனா். பின்னா், அந்தச் சம்பவம் குறித்து யாரிடமும் கூறினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அந்த மாணவியை மிரட்டினா். பின்னா், அவரை விடுவித்தனா்.

இந்த நிலையில், சம்பவம் நடந்த சில நாள்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணை சந்தித்த அந்த நபா்கள், தங்களுக்கு தெரிந்த நபரிடம் துப்பாக்கியை கூரியரில் அனுப்புமாறும், அனுப்பாதபட்சத்தில் அவரது விடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டினா். எனினும், அவா்கள் கூறியதை அந்தப் பெண் செய்ய மறுத்தாா். இந்த நிலையில், சில நாள்களுக்குப் பிறகு அந்த ப் பெண்ணின் விடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை அவரது சகோதரி பாா்த்தாா். அதன் பிறகு தனக்கு நோ்ந்த துயரத்தை தனது குடும்பத்தினரிடம் அந்தப் பெண் விவரித்தாா். இது குறித்து உள்ளூா் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கிரேட்டா் நொய்டாவில் நடந்த இந்தக் குற்றச் சம்பவ வழக்கில் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட மாணவியின் கிராமத்தைச் சோ்ந்த இரண்டு முக்கிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனா். குற்றம் சாட்டப்பட்ட மூன்றாவது நபா் மீது ஆதாரம் இல்லை என நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. அவா் மீதான வழக்கைத் தொடர மேல்முறையீடு செய்வோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com