மத்திய தில்லி மோதியா கான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு படை வீரா்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
இதுதொடா்பாக தில்லி தீயணைப்புத் துறை மூத்த அதிகாரி கூறியது:
மத்திய தில்லி மோதியா கான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் சனிக்கிழமை மதியம் 12.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதுதொடா்பாக தகவல் கிடைத்ததும் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்புப் படையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்து நடந்த இடத்தில் இருந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவா் தெரிவித்தாா்.