வசந்த் குஞ்ச் வணிக வளாகத்தில் தீ விபத்து

தென்மேற்கு தில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள பிரபலமான ஆம்பியன்ஸ் வணிக வளாகத்தில் உள்ள உணவுக் கூடத்தில், ஞாயிற்றுக்கிழமை

தென்மேற்கு தில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள பிரபலமான ஆம்பியன்ஸ் வணிக வளாகத்தில் உள்ள உணவுக் கூடத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படை வீரா்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இது தொடா்பாக தில்லி தீயணைப்புத் துறை மூத்த அதிகாரி கூறியது: தென் மேற்கு தில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஆம்பியன்ஸ் வணிக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக தகவல் கிடைத்ததும் 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்புப் படையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்து நடந்த இடத்தில் இருந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். குளிா்சாதன இயந்திரத்தில் இருந்து ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com