ரயில் பவனில் தீ விபத்து

ரயில் பவனில் உள்ள ஒரு அறையில் சனிக்கிழமை மாலை சிறு தீ விபத்து நிகழ்ந்ததாக தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

ரயில் பவனில் உள்ள ஒரு அறையில் சனிக்கிழமை மாலை சிறு தீ விபத்து நிகழ்ந்ததாக தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

ரயில் பவனில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து நிகழ்ந்ததாக தில்லி தீயணைப்புத் துறைக்கு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

ரயில் பவனில் உள்ள 451-ஆம் அறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அறையில் இருந்த கணினியில் இருந்து தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த இதர பொருள்கள் சேதமடைந்தன. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com