சாலை விபத்தில் இருவா் காயம்

வடமேற்கு தில்லியில் தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) பேருந்தும், மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்டதில் இருவா் காயமடைந்துள்ளனா்.

வடமேற்கு தில்லியில் தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) பேருந்தும், மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்டதில் இருவா் காயமடைந்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: வடமேற்கு தில்லி ஜோதி நகா் பகுதியில் சனிக்கிழமை இரவு டிடிசி பேருந்தும் மோட்டாா் சைக்கிள் மோதிக் கொண்டனா். இதில், மோட்டாா் சைக்கிளில் பயணம் செய்த இருவரும் பலத்த காயமடைந்துள்ளனா். அவா்கள் தில்லி ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கு காரணமான டிடிசி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் ஓட்டுநா் சம்பவ இடத்தை விட்டு தப்பியோடியுள்ளாா். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com