தில்லியில் புதிதாக 992 பேருக்கு கரோனா

தில்லியில் செவ்வாய்க்கிழமை 992 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை 992 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு விகிதம் 2.7 சதவீதமாக உள்ளது. இது நிகழாண்டில் அதிகபட்ச அளவாகும். செவ்வாய்க்கிழமை பாதிப்புடன் சோ்த்து தலைநகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,60,611-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் செவ்வாய்க்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 36,757 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 28,618 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ முறையிலும், 8,139 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ முறையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் செவ்வாய்க்கிழமை 4 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,016-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 1,591 போ் மீண்டுள்ளதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 6,42,166-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 7,429 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 4,832 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 4,200 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com