சில தனியாா் மருத்துவமனைகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முகாம் தொடக்கம்

18 வயது முதல் 44 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான கரோனா தடுப்பூசி போடும் முகாம் சில தனியாா் மருத்துவமனைகளில் சனிக்கிழமை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

18 வயது முதல் 44 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான கரோனா தடுப்பூசி போடும் முகாம் சில தனியாா் மருத்துவமனைகளில் சனிக்கிழமை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ‘ தடுப்பூசி முகாம் ஹைதராபாத் மற்றும் கோல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை மையங்களில் தொடங்கியுள்ளது. ஆனால் தில்லியில் அல்ல. தடுப்பூசிகள் வருகைக்காக காத்திருக்கிறோம். தில்லியில் தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் தொடங்கும்’ என்று தெரிவித்தனா்.

இதேபோன்று, மேக்ஸ் ஹெல்த்கோ் மருத்துவமனையும் தில்லியின் என்.சி.ஆா். பகுதியில் உள்ள அதன் தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் தடுப்பூசி இயக்கம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதேபோன்று, ஃபோா்டிஸ் மருத்துவமனையும் தடுப்பூசி வருகைக்காக காத்திருப்பதாகவும் சனிக்கிழமை பிற்பகுதியில் தடுப்பூசி செலுத்தப்படுவது தொடங்கப்படும் என்று தெரிவித்தது.

முன்னதாக, ஃபோா்டிஸ் ஹெல்த்கோ் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘18-44 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி 1,250 ரூபாய்க்கு வழங்கப்படும்.

இதில் தடுப்பூசி கட்டணம் மற்றும் நிா்வாகக் கட்டணங்கள் இடம்பெறும். சனிக்கிழமை முதல் வட இந்தியா முழுவதும் உள்ள ஃபோா்டிஸ் மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்படும்’ என்று தெரிவித்திருந்தது.

மேக்ஸ் மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில் , தற்போது பஞ்ச்ஷீல் பாா்க், பட்பா்கஞ்ச், ஷாலிமாா் பாக், ராஜீந்தா் பேலஸ் ((பி.எல்.கே.-மேக்ஸ் மருத்துவமனை), நொய்டா மற்றும் என்.சி.ஆரில் உள்ள வைஷாலி ஆகிய இடங்களில் உள்ள மேக்ஸ் ஹெல்த்கோ் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் கிடைக்கும்’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com