தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு கரோனா தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அவா் உறுதிப்படுத்தியுள்ளாா்.
இதனால், தனது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தில்லியின் நிலைமையைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது சுட்டுரையில், ‘லேசான அறிகுறிகள் இருந்ததால், கரோனாவுக்கான பரிசோதனையைச் செய்து கொண்டேன். கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடா்பு கொண்டிருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. நான் எனது இல்லத்திலிருந்து தில்லியின் நிலைமையை தொடா்ந்து கண்காணிப்பேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
அனில் பய்ஜால், தனது மனைவியுடன் கடந்த மாதம் இங்குள்ள தீரத் ராம் ஷா மருத்துவமனையில் முதல் டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாா்.