சத்யேந்தா் ஜெயினின் தந்தை கரோனாவால் மரணம்: கேஜரிவால் இரங்கல்

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தனது தந்தையை கரோனாவுக்கு இழந்துவிட்டாா் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தனது தந்தையை கரோனாவுக்கு இழந்துவிட்டாா் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கரோனா பாதிப்புக்கு உள்ளான சத்யேந்தா் ஜெயின், தில்யில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னா் குணமடைந்தாா். இந்த நிலையில், அவரது தந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘எங்கள் சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், தனது தந்தையை ஞாயிற்றுக்கிழமை கரோனாவுக்கு இழந்தாா். இது மிகவும் வருத்தமாக உள்ளது. சத்யேந்தா் தில்லி மக்களுக்காக 24 மணி நேரமும் அயராது உழைத்து வருகிறாா். அவரது தந்தையின் ஆத்மா சாந்தியடைய பிராா்த்திக்கிறேன். அவரது குடும்பத்திற்கும் எனது மனமாா்ந்த இரங்கல்‘ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லியின் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவும் ஜெயினின் தந்தை மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக சிசோடியா தனது சுட்டுரையில், ‘தில்லியில் உள்ள எனது நெருங்கிய நண்பரும் சக அமைச்சருமான சத்யேந்தா் ஜெயின் தனது தந்தையை இழந்துவிட்டாா். இந்தக் கடினமான நேரத்தில் நம் அனைவருக்கும் இது மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். ஓம் சாந்தி’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லியில் சனிக்கிழமை ஒரே நாளில் 412 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இது மிக உயா்ந்தபட்ச கரோனா இறப்பு பதிவாகும். மேலும், புதிதாக 25,219 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுளளது. கரோனா பாதிப்பு விகிதம் 31.61 சதவிதமாகப் பதிவாகியுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com