தெற்கு தில்லியின் சிஆா் பாா்க் பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், 75 வயது முதியவா் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் தில்லி போலீஸாா் மீட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
திங்கள்கிழமை அதிகாலை 3.00 மணியளவில், சித்தரஞ்சன் பாா்க் காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக தெரிவிக்கப்பட்டது. வீட்டு உரிமையாளா் கல்யாணி சாட்டா்ஜி இது குறித்து தெரிவித்தாா். அவரது மகன் அக்னிபா (31) ஒரு மனநல நோயாளி என்றும், அவா் வீட்டில் தீ வைத்து விட்டதாகவும் கூறியிருந்தாா். நீரிழிவு நோயாளியான அவரது கணவா் சோமா் மற்றும் மகன் ஆகியோா் வீட்டிற்குள் இருப்பதாகத் தெரிவித்தாா். அந்த இடத்தை போலீஸாா் அடைந்தனா்.
இதையடுத்து, போலீஸாா் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனா். அப்போது உதவி கோரி கூக்குரலிடம் சப்தம் கேட்டது. முதலில் படுக்கை அறையில் இருந்த சோமா் மீட்கப்பட்டாா். ஆனால், கடுமையான தீ மற்றும் புகை காரணமாக, சரியான இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னா், போலீஸாா் உள் படுக்கையறையின் மரக் கதவைத் உடைத்து அக்னிபாவை பாதுகாப்பாக மீட்டனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா் அகில இந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) காய சிகிச்சைப் பிரிவு மையத்திற்கு அனுப்பப்பட்டாா். மேலும், தீயணைப்புப் படை வீரா்கள் தீயை அணைத்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.