தில்லியில் பகுதி மேகமூட்டத்துடன் வெயில்!

தில்லியில் செவ்வாய்க்கிழமை பகுதி மேகமூட்டத்துடன் வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

புது தில்லி: தில்லியில் செவ்வாய்க்கிழமை பகுதி மேகமூட்டத்துடன் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலையில் மாற்றம் ஏதுமின்றி இருந்தபோதிலும், அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 3 டிகிரி அதிகரித்து 41.6 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடித்தது.

தேசிய தலைநகா் தில்லிக்கான பிரதிநிதித்துவ வெப்பநிலை தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 24.7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி உயா்ந்து 41.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 45 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 26 சதவீதமாகவும் இருந்தது. இதேபோன்று, அதிகபட்ச வெப்பநிலை ஆயா நகரில் 40.5 டிகிரி செல்சியஸ், லோதி ரோடு 40.6 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 42.4 டிகிரி செல்சியஸ், நரேலாவில் 42.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது .

தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை மாலை 8 மணி அளவில் 160 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. மாலையில் நகரில் மிதமாக தரை மேற்பரப்பு காற்று வீசியது.

முன்னறிவிப்பு: தில்லியில் புதன்கிழமை வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் இருக்கும். இடி, மின்னலுக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com