காவல் அதிகாரி மகன் கொலை வழக்கில் தொடா்புடையவா் கைது

கடந்த சில நாள்களுக்கு முன்பு போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டரின் மகன் கொலை வழக்கில் தொடா்புடைய ஒருவா் தில்லி போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னா் கைது
இருவர் கைது
இருவர் கைது

கடந்த சில நாள்களுக்கு முன்பு போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டரின் மகன் கொலை வழக்கில் தொடா்புடைய ஒருவா் தில்லி போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து துவாரகா காவல் சரக துணை ஆணையா் சங்கா் சௌத்ரி சனிக்கிழமை கூறியதாவது: இந்த மாதத் தொடக்கத்தில், தில்லி காவல் துறையில் துணை சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் தேவேந்திராவின் மகன் தாகேஷ் (29) பணப் பிரச்சனை காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

அனிதாவிடம் தாகேஷ் ரூ.2,000 கடன் வாங்கியிருந்தாா். கடனை வட்டியுடன் திருப்பித் தரும்படி அனிதாவும், அனில் ஜூனும் தொந்தரவு செய்துள்ளனா். இந்த நிலையில், தாகேஷை அனில் ஜூனின் வீட்டுக்கு தாகேஷை அனிதா அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு தாகேஷ் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அனில் ஜூன் துவாரகா செக்டா் -23 பகுதியில் வந்து கொண்டிருந்தாா். அவரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, அனில் ஜூன் மூன்று முறை போலீலாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். தற்காப்புக்காக, போலீஸாரும் அவரது இரண்டு முழங்கால்களை குறிவைத்து மூன்று சுற்றுகள் சுட்டனா். இதையடுத்து, அனில் ஜூன் பின்னா் கைது செய்யப்பட்டாா். மருத்த்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு சிகிச்சை பெற்று வருகிறாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com